Wednesday, May 1, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Top Newsஇலங்கை கொண்டு செல்லப்படும் சாந்தனின் உடல்!

இலங்கை கொண்டு செல்லப்படும் சாந்தனின் உடல்!

இலங்கை கொண்டு செல்லப்படும் சாந்தனின் உடல்!! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் இன்று உயிரிழந்த நிலையில், அவரின் உடல் இலங்கை கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-இல் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா், அவா் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தாா்.

இதற்கிடையே இலங்கை செல்ல சாந்தனுக்கு மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவமனையில் திவீர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் காலை 7.50 மணியளவில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சாந்தனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

மேலும், சாந்தனின் உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு இலங்கைக்கு எடுத்துச் செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்