கஞ்சா கடத்தி கைதாகி புலனாய்வுத் தலையீட்டால் விடுதலையான அருண்சித்தார்த்து பற்றி வெளியான தகவல்
யாழ்ப்பாணம் காக்கதீவு பகுதியில் பெருமளவு கஞ்சாவைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அருண்சித்தார்த் என்பவர், பின்னர் இராணுவ புலனாய்வுத் துறையினரின் தலையீட்டினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஒரு முக்கிய போதைப்பொருள் வியாபாரி என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த சட்டவிரோதமான ஆவ குழுவின் தலைவனாக இவர் கருதப்படுவதாகவும், கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கத்திவெட்டுச் சம்பவங்களுடனும் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
சமூக விடுதலைக்காகப் போராடிய தலைவர்களான அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் படங்களைப் பின்னணியில் வைத்துக்கொண்டு, சாதிய ஒழிப்புப் போராளி என்ற முகமூடிக்குள் ஒளிந்திருந்து செயல்படும் இவர், உண்மையில் சிங்களப் பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இயங்குவதாகப் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சாதியப் போராளி என்ற வேடம் போட்டுக்கொண்டு தமிழ் மக்களிடையே உள் முரண்பாட்டைத் தூண்டி, தமிழ் இனத்தில் பிளவுகளை உருவாக்கி, அவர்களைப் பலமிழக்கச் செய்வதன் மூலம் இலங்கை இராணுவ புலனாய்வாளரின் நோக்கத்தை நிறைவேற்ற முயலும் ஒருவராகவே இவர் கருதப்படுகிறார்.
தமிழ் மக்கள் பலருக்கும் இவரது உண்மை நோக்கம் புரிந்துவிட்டதால், பொதுமக்கள் மத்தியில் இவருக்கு எவ்வித ஆதரவும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மாறாக, இவர் சமூக ஊடகங்களில் வெளியிடும் கருத்துகளுக்கு சிங்கள இனவெறியர்களிடமிருந்தே ஆதரவும் பாராட்டும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
இவர் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பின்னணியில் வைக்க வேண்டியவை பெரியார் அல்லது அம்பேத்கரின் படங்களல்ல; மாறாக குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவோர், போதைப்பொருள் கடத்துவோர் போன்றோரின் படங்களோ அல்லது மகிந்த, கோத்தாபயா போன்றோரின் உருவப்படமோ மட்டுமே பொருந்தும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.