பிரான்சிலுள்ள (France) மாண்டக்னாக் (Montagnac) என்னுமிடத்தில் தன் தாயுடன் வாழ்ந்துவந்த நான்கு (4) வயதுக் குழந்தை ஒன்று தொடர்ந்து பள்ளிக்கு வராததால், அவளுடைய தாயைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளார் அந்தச் சிறுமியின் ஆசிரியை (Teacher). அவரைத் தொடர்புகொள்ள முடியாததால் சந்தேகம் அடைந்து அவர் காவல் துறைக்குத் (Police) தகவல் கொடுக்க, காவல் துறையினர் அந்தக் குழந்தையின் வீட்டுக்கு விரைந்துள்ளனர். வீட்டின் ஜன்னலை உடைத்துக்கொண்டு அவர்கள் உள்ளே நுழைய, வீட்டுக்குள் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. நாற்பது (40) வயதுடைய அந்தப் பெண்ணின் உயிரற்ற உடல் (Dead body) வீட்டுக்குள் கிடக்க, அதன் அருகில் அந்த நான்கு (4) வயதுக் குழந்தை பரிதாபமாக அமர்ந்திருப்பதைப் காவல் துறையினரும் அவசர உதவிக்குழுவினரும் (Emergency team) கண்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவர்களைக் கண்டதும் குழந்தை கதறி அழத் துவங்க, பல நாட்களாக உணவும் நீரும் உட்கொள்ளாததால் சோர்வும் கடும் அதிர்ச்சியும் அடைந்திருந்த அவளை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் (Hospital) சேர்த்துள்ளனர் அவசர உதவிக்குழுவினர். இந்தச் சம்பவம் கடந்த ஜூன் (June) நான்காம் (4) தேதி நடந்துள்ள நிலையில், மே (May) முப்பத்து ஒன்றாம் (31) தேதியிலிருந்தே அந்தப் பெண்ணைத் தொடர்புகொள்ள இயலவில்லை என அவரது அண்டை வீட்டாரும் உறவினர்களும் கூறியுள்ளனர். அந்தப் பெண்ணுக்கு வலிப்பு நோய் (Epilepsy) இருந்துள்ள நிலையில், வலிப்பு ஏற்பட்டு, மூச்சுத்திணறி அவர் உயிரிழந்திருக்கலாம் எனக் காவல் துறையினரால் கருதப்படுகிறது.
சிறு குழந்தை என்பதால், அவளால் வீட்டின் கதவைத் திறந்து வெளியே வர முடியாமலும், உதவி கேட்க முடியாமலும் போயுள்ளது. மீட்கப்பட்ட அந்தச் சிறுமி இப்போது தன் உறவினர் (Relative) ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதாகவும், அவளுக்குத் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், அந்த இருண்ட வீட்டுக்குச் சென்று சடலத்தையும், குழந்தையையும் கண்ட காவல் துறையினர் மற்றும் பிற அலுவலர்களுக்கு ஏற்பட்ட கடும் அதிர்ச்சி காரணமாக, அவர்களுக்கு மனநல ஆலோசனை (Psychological counseling) வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.