கலை, கலாசாரம்
இராணுவ வாகனம் மோதி விபத்து : யுவதி பலி !

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் இன்று (20) உயிரிழந்துள்ளார்.
புத்தூர் வாதரவத்தையை சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் பால் எடுத்து சென்றவேளை , புத்தூர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்திக்கு அருகில் இராணுவ வாகனம் மோதியதில் குறித்த யுவதி படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த யுவதியை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை யுவதி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் உயிரிழந்த யுவதியின் பிறந்ததினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
, இராணுவ வாகனம் மோதி விபத்து : யுவதி பலி !









