கலை, கலாசாரம்

யாழ்ப்பாணம் அனலைதீவில் மர்ம பெட்டி மீட்பு !

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு கடற் பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பெட்டியை கண்ட அனலைதீவு மீனவர்கள் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊர்காவற்றுறை பொலிசார் மேற்படி பெட்டியை மீட்டுள்ளனர்மேற்படி பெட்டியினுள் தொலைத் தொடர்பு கருவி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

, யாழ்ப்பாணம் அனலைதீவில் மர்ம பெட்டி மீட்பு !

Back to top button