மட்டக்களப்பில் உலக இயற்கை பாதுகாப்பு தின பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் அகற்றல் சிரமதானம்.

(சித்தா)
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்டப் பணிமனை மற்றும் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் உகல இயற்கை பாதுகாப்பு தினமான ஜுலை 28 இயற்கையை கண்போல் பாதுகாப்போம், பொலித்தீன் அற்ற எமது நகரம் என்ற தொனிப்பொருளில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் அகற்றல் சிரமதானம் நடைபெற்றது. மட்டக்களப்பு ஊறணிச் சந்தி முதல் கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலயம் வரையான வாவிக்கரை மற்றும் பிரதான வீதியின் இரு மருங்கிலும் காணப்பட்ட பெருந்திரளான பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்கள் அகற்றப்பட்டது. மாவட்டத்தின் சகல பாகங்களிலும் இருந்து வருகைதந்த 50 இளைஞர் யுவதிகளும் 16 உத்தியோகஸ்தர்களும் இச் சிரமதான நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். மாவட்ட இளைஞர் கழக சம்மேளன செயலாளரும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியுமான மாணிக்கப்போடி சசிகுமார் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இச் சிரமதான நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் நிஷாந்தி அருள்மொழி , மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி சதீஸ்வரி கிருபாகரன் மற்றும் இளைஞர் சேவை உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டனர்
, மட்டக்களப்பில் உலக இயற்கை பாதுகாப்பு தின பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் அகற்றல் சிரமதானம்.







