பியுமி ஹன்ஸ்மாலி கோடிக்கணக்கான சொத்து சம்பாதித்த குற்றச்சாட்டில் விசாரணைக்கு ஆஜர் !

பிரபல மொடல் அழகியான பியுமி ஹன்ஸ்மாலி இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு சென்றுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான முறையில் பல கோடி ரூபாய் சொத்துக்களை சம்பாதித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே பியுமி ஹன்ஸ்மாலி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு சென்றுள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை எனவே பயப்பட அவசியம் தனக்கு இல்லை என கூறினார்.
”எனக்கு வாக்கு மூலம் ஒன்றை வழங்க வரசொல்லியிருக்கிறார்கள். கடந்த வாரம் வரச்சொல்லி இருக்கிறார்கள், ஆனால் எனக்கு சனிக்கிழமை தான் கடிதம் வந்தது. இன்னும் தேவையான பல ஆவணங்களை செய்து கொள்ள முடியவில்லை. 25,000 கிரீம் ஓடர்களும் உள்ளது. எனது கிரீம் ஒன்றின் விலை சுமார் 35,000 ரூபாய். அதனால் இலங்கை மக்கள் எனது வருமானம் குறித்து தீர்மானிக்க முடியும். அப்போது தெரியும் பியூமி ஹன்சமாலிக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்று”.
, பியுமி ஹன்ஸ்மாலி கோடிக்கணக்கான சொத்து சம்பாதித்த குற்றச்சாட்டில் விசாரணைக்கு ஆஜர் !









