கலை, கலாசாரம்

காதல் விவகாரத்தில் பாடசாலை மாணவனை கத்தியால் குத்திய சக மாணவர்கள்!

[ad_1]

கண்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று (28-08-2024) பிற்பகல் பிலிமத்தலாவை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

காயமடைந்த மாணவன் பாடசாலை முடித்து விட்டு மீண்டும் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது பிலிமத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து 3 மாணவர்களினால் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

பின்னர், காயமடைந்த மாணவன் பிரதேசவாசிகளின் உதவியுடன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த தாக்குதலை நடாத்தியதாக கூறப்படும் 3 மாணவர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகண்ணாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

[ad_2]
Lankafire

Back to top button