நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் சாக்கு போக்குடன் காலத்தை கழிப்பது மக்களுக்கு செய்கின்ற துரோகம் : ஹரீஸ் எம்.பி !


(நூருல் ஹுதா உமர்)
பாராளுமன்ற உறுப்பினர் எனும் அமானிதத்திற்கு நாங்கள் இறைவனிடத்தில் பதில் சொல்ல வேண்டும். எனவே அந்தக் கடமை உணர்வில் தான் நாங்கள் இவ்வாறான சேவை திட்டங்களை மக்களுக்கு வழங்குகின்றோம். இருந்தாலும் நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் சாக்கு போக்குடன் காலத்தை கழிப்பது மக்களுக்கு செய்கின்ற துரோகம் என்றுதான் நான் சொல்வேன்.
அம்பாறை மாவட்ட சம்மாந்துறையில் அபிவிருத்தி பணிகளை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது, துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்டில் ஏற்பட்ட கொரோனா மூலம் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது நாட்டின் அரசாங்கம் பாராளுமன்றத்தில் உள்ள எந்த அமைச்சருக்கோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ நாட்டின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஆனால் இப்போது ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் சில நிதி ஒதுக்கீடுகளை செய்ய முற்பட்டபோது. துரதிஷ்டவசமாக எதிர்க்கட்சியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படாமல் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உங்களுக்கு தெரியும் ஒரு கற்றறிந்த கல்விமான் அதேபோல இனவாத ரீதியாக சிந்திக்கின்ற ஒரு கடும்போக்கு வாதி அல்ல. மக்களினுடைய பிரச்சினையினை கேட்டறிகின்ற ஒரு ஜனாதிபதியாக இருந்தபடியினால் நான் தைரியமாக சென்று நமது மாவட்டத்தின் அவல நிலை பிரச்சினைகளை எடுத்துக் கூறினேன்.
நீண்ட காலமாக நாங்கள் யுத்தத்தில் முகம் கொடுத்தது மட்டுமில்லாமல் அரசின் அபிவிருத்தித் திட்டத்தில் முழுமையாக உள்வாங்கப்படாத மாவட்டம் என்பதை சுட்டி காட்டியதால் எங்களுக்கு மெது மெதுவாக நிதிகளை ஒதுக்கீடு செய்ய ஆரம்பித்தார். அதனால்தான் நான் அம்பரை மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்ற ஒரு கடமையில் இந்த அபிவிருத்தி திட்டத்தை உங்களுக்காக கொண்டு வந்திருக்கிறேன் என்றார்.
, நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் சாக்கு போக்குடன் காலத்தை கழிப்பது மக்களுக்கு செய்கின்ற துரோகம் : ஹரீஸ் எம்.பி !








