இலங்கை செய்திகள்
தகுதியான மாணவர்களுக்கான உதவித் திட்டம்: பாடசாலை உபகரணங்களுக்கான சேகரிப்பு ஆரம்பம்
தகுதியான மாணவர்களுக்கான உதவித் திட்டம்: பாடசாலை உபகரணங்களுக்கான சேகரிப்பு ஆரம்பம்

பாடசாலை புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாத பிள்ளைகளுக்கு அரசாங்கத்தால் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய, கொடுப்பனவு வழங்குவதற்கு தகுதியான மாணவர்களின் தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அனைத்து தகவல்களையும் நாளைய தினத்துக்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, அந்த குடும்பங்கள் குறித்த தகவல்களை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கொடுப்பனவு வழங்கப்படும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.