கலை, கலாசாரம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

[ad_1]

நாளையதினம் (29) வடக்கு வங்கக் கடலைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, குறித்த கடற்பகுதிகளில் மிக பலத்த காற்றுடன் (மணித்தியாலத்துக்கு 70-80 கி.மீ.) கனமழை பெய்யக்கூடும் என்றும், அந்த கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் வடக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் நெடு நாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதாவது இன்று (29) பிற்பகல் 3:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை (29) பிற்பகல் 3:30 மணி வரை செல்லுபடியாகும்.

[ad_2]
Lankafire

Back to top button