கலை, கலாசாரம்

சிடாஸ் அமைப்பின் அனுசரனையுடன் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்களுக்கான விஷேட வகுப்புகள் ஆரம்பம்

(சித்தா)

மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் .பொ..சாதாரண தரம் கற்கும் மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்தும் பொருட்டு விஞ்ஞானம், கணிதம், தமிழ் ஆகிய பாடங்களுக்கான விஷேட வகுப்புகளின் ஆரம்ப நிகழ்வு இன்று 2024.06.01 சனிக்கிழமை
காலை 10.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.துரைராசா சபேசன் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது 

இந்நிகழ்வில் பட்டிருப்பு வலய  வளவாளர் திரு.பேரின்பராசா யோகேஸ்வரன். வித்தியாலய பிரதி அதிபர் திரு.சோமசுந்தரம் தேவநேசன் மற்றும் விஷேட வகுப்பு ஆசிரியர்கள். பெற்றோர்கள். மாணவர்கள் ஆகியோருடன் சிடாஸ் மட்டக்களப்பு அமைப்பின் அங்கத்தவர்களான திரு.முத்துராஜா புவிராஜா. திரு.அட்சரலிங்கம் ஜெயவரதராஜன். திரு.சுப்பிரமணியம் கணேஷ் ஆகியோரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர். 

இச்செயற்றிட்டத்திற்கான அனுசரனையை சிடாஸ் கனடா அமைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

, சிடாஸ் அமைப்பின் அனுசரனையுடன் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்களுக்கான விஷேட வகுப்புகள் ஆரம்பம்

Back to top button