உகந்தை கொடியேற்றதினத்தன்று பத்தாயிரம் அடியார்கள் கானகப் பிரவேசம் !

!
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடி வேல்விழாவை ஒட்டிய பாதயாத்திரை வரலாறு காணாத வகையில் இப்பதிவு உள்ளது என ஆலய வண்ணக்கர் சுதுநிலமே சுதா தெரிவித்தார்.
வழமையாக பாதயாத்திரை ஆரம்பதினம் மற்றும் கொடியேற்ற தினங்களில் சுமார் மூவாயிரம் அல்லது நான்காயிரம் அடியார்கள் பயணிப்பார்கள்.
ஆனால் இம்முறை கடந்த 30ஆம் தேதி முதல் நாள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கானகப் பாதை திறந்து வைக்கப்பட்ட அன்றைய தினம் சுமார் 7000 அடியார்கள் கானகத்தில் பிரவேசித்தனர்.
வனஜீவராசிகள் திணைக்கள பதிவின் படி நேற்று மட்டும் 9321 பேர் பயணித்துள்ளதாக பதிவு செய்யப்பட்டது.
இதுவரை 25,000 மேற்பட்ட பாதயாத்திரீகர்கள் கானகத்தினுள் பிரவேசித்து இருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆறு நாட்களாக பயணித்து நேற்றும் முன்தினமும் கதிர்காமத்தை சுமார் 5000 அடியார்கள் வந்தடைந்தனர்.
இம்முறை வடக்கு கிழக்கிலிருந்து சுமார் 10000 அடியார்கள் கொடியேற்றத்தில் கலந்து கொண்டார்கள். எதிர்வரும் 11ஆம் தேதி வரை காட்டுப்பாதை திறந்திருக்கும்.
செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் கடந்த 60 நாட்களின் பின்னர் நேற்று முன்தினம் கதிர்காமத்தை அடைந்து கதிரமலை ஏறி அவர்களை அவர்களது நேர்த்தியை பூர்த்தி செய்து இருந்தார்கள்.
இன்னும் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை போன்ற பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான யாதத்திரீகர்கள் தற்சமயம் கானகத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள் .
இம்முறை பயணம் அனைவருக்கும் சாதகமாக அமைந்திருந்தது காலநிலை சிறப்பாக இருந்தது.
எனினும் இரண்டு இடங்களிலே போலீஸ் மற்றும் ராணுவத்தினரின் கணக்கெடுப்பு இடம் பெற்று இருந்தது.
, உகந்தை கொடியேற்றதினத்தன்று பத்தாயிரம் அடியார்கள் கானகப் பிரவேசம் !









