கலை, கலாசாரம்

நாட்டின் சீரற்ற காலநிலையால் விவசாயிகள் பெருமளவு பாதிப்பு.!!

நாட்டின் சீரற்ற காலநிலையால் விவசாயிகள் பெருமளவு பாதிப்பு.!!

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை கமலபுரம்சேவை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் விவசாயிகள் அரிசி கொள்வவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது பற்றி மேலும் தெரிவித்த அவர்கள் தற்பொழுது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் இருந்த பல ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி தற்பொழுது முளைக்க ஆரம்பித்துள்ளது.

விதைத்த நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் இது தொடர்பாக விவசாய காப்புறுதி கூட்டுத்தாபனம் கடந்த ஆண்டு வெள்ளம் மற்றும் நோய் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வயல் நிலங்களை பார்வையிட்ட அதிகாரிகள் உரிய வகையில் தமக்கான அழிவிற்கு இழப்பீடு வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் ஒரு சிலருக்கு மாத்திரமே அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் வைப்பிளிடப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்களுக்கு எந்தவித பதிலையும் வழங்காது இழுத்தடிப்பை மேற்கொள்ளுகின்றனர்.

இம்முறையும் பாரிய அளவிலான அழிவு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் ஆகிய நாங்களும் தற்பொழுது அரசியை கடையிலேயே கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இம்முறையாவது விவசாய காப்புறுதி கூட்டுத்தாபனம் உரிய வகையில் பார்வையட்டு எமாக்கு ஏற்பட்டுள்ள அழிவுக்கான கொடுப்பவை வழங்க வேண்டும் எனவும் இல்லாவிடில் தொடர்ச்சியாக நெற்செய்கை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Back to top button