கலை, கலாசாரம்
யாழில் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

யாழில் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பட்டது இந் நிகழ்வு
யாழ்ப்பாணம் கொன்மென்ட் வீதி திருவள்ளுவர் சனசமூக நிலையத்தில் அப்பகுதியில் வசிக்கும் வறுமைக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு டில்லு சமூக சேவை அமைப்பினால் இன்றைய தினம் (30.01.2024 ) வழங்கி வைக்கப்பட்டது.
இதில் முன்பள்ளி மாணவர்கள் தொடக்கம் உயர்தர மாணவர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

டில்லு சமூக சேவை அமைப்பு கடந்த ஒன்பது வருடங்களாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல சமூக சேவை நல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கான கல்வி திட்ட உதவிகள் வாழ்வாதார உதவிகள் போன்ற பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.








