2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை 3 ஆம் தவணை இன்று ஆரம்பம்
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை 3 ஆம் தவணை இன்று ஆரம்பம்

2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டம் இன்று வியாழக்கிழமை (02) ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி இன்று முதல் ஜனவரி 24 ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளையும் நடத்த கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பாடசாலை ஆரம்பமானதும் நாளை வெள்ளிக்கிழமை (03) முதல் இறுதி தவணை பரீட்சைகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2025ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதற்கிடையில் அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் 2025 ஆம் ஆண்டு முதல் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் தவணைக்கான இரண்டாம் பாடசாலை தவணை ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 11 வரையிலான திகதிகளிலும் இறுதி கட்டம் ஏப்ரல் மாதம் 21 முதல் மே 9 ஆம் திகதி வரை நடைபெறும்.








