கலை, கலாசாரம்
தெற்கு அதிவேக வீதியில் இரண்டு லொறிகள் மோதி விபத்து ஒருவர் பலி ! மூவர் காயம் !

தெற்கு அதிவேக வீதியில் 174.2 ஆர் மைல் கல் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மத்தலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியொன்று முன்னால் பயணித்துக்கொண்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த நால்வர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், லொறியொன்றின் உதவியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 35 வயதானவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் தெற்கு அதிவேக வீதியின் அங்குனுகொலபலஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
, தெற்கு அதிவேக வீதியில் இரண்டு லொறிகள் மோதி விபத்து ஒருவர் பலி ! மூவர் காயம் !








