கலை, கலாசாரம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஒருவர் படுகொலை!

[ad_1]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்டத்தில் ஹினிதும தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக கடமையாற்றிய நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி – ஹினிதும தொகுதியின் பிரதான அமைப்பாளராக இருந்த சம்பத் கமகே, என்பது தெரியவந்துள்ளது.
பலியானவர் இன்று (17) பனாகொட, சமகி மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, முச்சக்கரவண்டியில் வந்த நபரொருவர் அவரது தலையில் பொல்லினால் தாக்கியுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த காயங்களுடன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
கொலையை செய்த சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Lankafire








