இலங்கை செய்திகள்

வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்..! வசமாக மாட்டிய வர்த்தகர்…

வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்..! வசமாக மாட்டிய வர்த்தகர்...

வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதலான சம்பவமொன்று சுங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 75 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய வர்த்தகர் ஆவார்.

சந்தேக நபர் துபாயிலிருந்து நேற்றைய தினம் பிற்பகல் 04.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

வெளிநாட்டு, சிகரெட்டுகள், பறிமுதல், வர்த்தகர்

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 1,520 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button