யாழ்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சமுர்த்தி வங்கியின் உதவி முகாமையாளர் உயிரிழப்பு!

[ad_1]
யாழில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி சமுர்த்தி வங்கியின் உதவி முகாமையாளர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (26-08-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் பத்மநாதன் ஐங்கரன் என்ற 50 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனது மகனை தனியார் வகுப்பிலிருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த வேளை, நேற்று பிறவுண் வீதியில் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்தவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக யாழ், போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
[ad_2]Lankafire








