கலை, கலாசாரம்

ராகமையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

ராகமையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படுவத்த பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகமையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ராகம ,படுவத்த பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர்  ஆவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து ,67 லீற்றர் (90 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button