இலங்கை செய்திகள்
கோடிக்கணக்கில் திருடிய சாரதி..! கண்டால் உடன் அறிவிக்கவும்…
கோடிக்கணக்கில் திருடிய சாரதி..! கண்டால் உடன் அறிவிக்கவும்...

கோடிக்கணக்கில் திருடிய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மினுவாங்கொடை நகரில் தனியார் நிறுவனம் ஒன்றின் பணப் பாதுகாப்பு வாகனத்தின் சாரதியாக கடமையாற்றிய ஒருவரே இவ்வாறு திருடியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கம்பஹா உகல்பொட பிரதேசத்தில் சந்தேகநபரின் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் கீழுள்ள தொலைபோசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கம்பஹா பொலிஸ் நிலையம் – 0718591608 ,0718591610








