இலங்கை செய்திகள்
மோசடி வைத்தியர் கைது..! சி.ஐ.டி யினரின் அதிரடி நடவடிக்கை…
மோசடி வைத்தியர் கைது..! சி.ஐ.டி யினரின் அதிரடி நடவடிக்கை...

மோசடி வைத்தியர் ஒருவர் 55 மில்லியன் ரூபா பண மோசடி செய்த குற்றம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளராக கடமையாற்றிய கோனஹேன, வேபட பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய வைத்தியரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் குற்றப் புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.








