
சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன. இந்த நாட்களில், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வரும் மரக்கறிகளின் இருப்பு படிப்படியாக குறைந்து வருவதால் அவற்றின் விலை உயர்வடைந்துள்ளது.

இதன்படி, மரக்கறிகளின் விலைகள் பின்வருமாறு,
ஒரு கிலோ வெண்டக்காய் ரூ 230
ஒரு கிலோ புடலங்காய் ரூ.220
ஒரு கிலோ தக்காளி ரூ.180 – 210
ஒரு கிலோ வெள்ளரிகாய் ரூ.100
ஒரு கிலோ போஞ்சி ரூ.350 – 370
ஒரு கிலோ கறி மிளகாய் ரூ. 480 – 550
ஒரு கிலோ கோலிபிளவர் (முட்டைகோஸ்) ரூ.400
ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.330 – 380
எவ்வாறாயினும், கிழங்கு, கரட், முட்டைகோஸ், முள்ளங்கி போன்றவற்றின் அட்டவணை விலைகள் 100 ரூபாவிற்கும் குறைவாக இருந்த போதிலும், சில்லறை சந்தையில் இவை 200 முதல் 250 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.







