கலை, கலாசாரம்

பெண் ஒருவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

[ad_1]

நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபரான பெண்ணொருவரை கைது செய்ய இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, குறித்த பெண் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் 150 மில்லியன் பெறுமதியான சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்றின் மீது தேடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த பெண் வேறொரு நபராக ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபரின் புகைப்படத்தை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதுடன் அது தொடர்பான புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட சந்தேக நபர் தொடர்பான எந்தவொரு தகவலையும் பின்வரும் தொடர்பு எண்கள் ஊடாக வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு - 011 243 4504
குற்றப் புலனாய்வுத் திணைக்கள செயற்பாட்டு அறை - 011 242 2176
[ad_2]
Lankafire

Back to top button