கலை, கலாசாரம்
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

[ad_1]
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ உட்பட பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நிதி மோசடி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதன்படி, குறித்த வழக்கு இன்று (05) கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி அரசாங்கத்தின் போது நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது HelloCorp (Pvt.) Ltd. இல் 15 மில்லியன் ரூபாய் முறைகேடான நிதியை முதலீடு செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Lankafire







