கலை, கலாசாரம்
கடைக்கு சென்றவர் சடலமாக மீட்பு

[ad_1]
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஆலாங்கேணி பிரதேசத்தையும் பைசல் நகர் பிரதேசத்தையும் இணைக்கின்ற பாலத்தடியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை (20) இரவு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா, மஹரூப் நகர், 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 60 வயதுடைய முஹம்மது லெப்பை முபாரக் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
குறித்த நபர் செவ்வாய்க்கிழமை (20) மாலை 5 மணி அளவில் கடைக்கு செல்வதாக மனைவியிடம் கூறி வெளியே சென்றுள்ளதுடன் இரவு 7 மணி அளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
[ad_2]Lankafire








