கலை, கலாசாரம்
நீதி கேட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்..! மட்டக்களப்பில் போராட்டம்…
நீதி கேட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்..! மட்டக்களப்பில் போராட்டம்...

நீதி கோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத். ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் நடராசா உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது நாங்கள் கேட்பது இழப்பீட்டையோ, மரணச் சான்றிதழையோ அல்ல முறையான நீதியையோ, எமது உரிமை ?, எமது எதிர்காலம் ? இப்போது, எமது உறவுகள் எங்கே, என பல வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.








