கலை, கலாசாரம்

தேரரை போன்று வேடமணிந்து தலைமறைவாகயிருந்த சந்தேக நபர் கைது !

இரு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து தலைமறைவாக இருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக நிக்கவரெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர், தேரர் ஒருவரை போன்று வேடமணிந்து அநுராதபுரம் பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

48 வயதுடைய மேலதிக வகுப்பு ஆசிரியரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து சுமார் 8 மாத காலமாக தலைமறைவாக இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

, தேரரை போன்று வேடமணிந்து தலைமறைவாகயிருந்த சந்தேக நபர் கைது !

Back to top button