தெதுரு ஓயாவில் காணாமல் போன தாயும், இரு மகன்களும் சடலமாக மீட்பு!

[ad_1]
தெதுரு ஓயாவில் நீராடச் சென்றபோது காணாமல் போன தாய் மற்றும் இளைய மகனின் சடலங்கள் இன்றையதினம் (26) காலை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போகமுவ பிரதேசத்தில் இருந்து தெதுரு ஓயாவில் நேற்றையதினம் (25-08-2024) பிற்பகல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் 2 பிள்ளைகளும் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.
இதனையடுத்து நேற்று மாலை, மகன்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன் தாயையும் மற்றுமொரு மகனை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
9 வயது மகனின் சடலம் நேற்று மீட்கப்பட்டதாகவும், 36 வயதான தாய் மற்றும் அவரது 5 வயது மகனைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில், காணாமல்போன தாய் மற்றும் பிள்ளையின் சடலங்கள் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பேரகஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய தாயும் அவரது 9 வயது மற்றும் 5 வயதுடைய இரண்டு மகன்களுமே ஆவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Lankafire








