இலங்கை செய்திகள்

தரமற்ற மருந்து விநியோகம்: 18 முன்னாள் அமைச்சர்களுக்கு நீதிமன்றம் வாக்கு பதிவு உத்தரவு!

தரமற்ற மருந்து விநியோகம்: 18 முன்னாள் அமைச்சர்களுக்கு நீதிமன்றம் வாக்கு பதிவு உத்தரவு!

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  தொடர்பில் 18 முன்னாள் அமைச்சர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

தரமற்ற மருந்து விநியோகம்: 18 முன்னாள் அமைச்சர்களுக்கு நீதிமன்றம் வாக்கு பதிவு உத்தரவு!

கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையில் அங்கம் வகித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் அமைச்சர்களான திரான் அலஸ், மஹிந்த அமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க, நிமல் சிறிபால மற்றும் அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய 18 பேரிடம் வாக்கு மூலங்களைப் பெறுவது அவசியம் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர்  ஜெனரல் மிஸ் லக்மினி கிரிஹாகம, இந்த விடயம்  தொடர்பில் மாளிகாகந்த நீதிமன்றில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியதையடுத்து, அதற்கு அனுமதியளித்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Back to top button