கலை, கலாசாரம்

உலோக ஏற்றுமதிக்கு கைத்தொழில் அமைச்சின் அனுமதி தேவை

எதிர்காலத்தில் உலோகங்களை ஏற்றுமதி செய்பவர்கள் கைத்தொழில் அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உலோகம் தொடர்பான தொழில்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

உலோகம், இரும்பு, அது தொடர்பான உபகரணங்கள் மற்றும் பழைய பொருட்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை உலோக கழிவுகள், இரும்பு தொடர்பான உபகரணங்கள் மற்றும் செம்பு, பித்தளை, அலுமினியம், சீனாவேர் மற்றும் வெள்ளை இரும்பு போன்ற குப்பை பொருட்கள் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

, உலோக ஏற்றுமதிக்கு கைத்தொழில் அமைச்சின் அனுமதி தேவை

Back to top button