இலங்கை செய்திகள்

பாடசாலை சீருடை குறித்து பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

பாடசாலை சீருடை குறித்து பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளின் முழுத் தேவையும் (100%) சீன மக்கள் குடியரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கத்தின் உதவித்திட்டமாக கிடைக்கப்பெற்ற இந்த பாடசாலை சீருடைகளை சீனத் தூதுவர் நேற்று(10) கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் வைத்து பிரதமரிடம் கையளித்துள்ளார்.

இதன்போதே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பாடசாலை சீருடை குறித்து பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

2025ம் ஆண்டிற்கான எமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் பிள்ளைகளுக்கு சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்காக 11,817 மில்லியன் மீற்றர் துணி தேவையாகவுள்ளதுடன், பாடசாலை சீருடைகள் வழங்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 4,640,086 ஆகும்.

பாடசாலை சீருடை குறித்து பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளின் முழுத் தேவையும் (100%) சீன மக்கள் குடியரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சீருடை துணிகள் மூன்று தொகுதிகளாக இலங்கையை வந்தடையவுள்ளதுடன், முதலாவது மற்றும் இரண்டாவது தொகுதிகள் ஏற்கனவே இலங்கையை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மூன்றாவது தொகுதி டிசம்பர் 25 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது என கூறியுள்ளார்.

Back to top button