மனைவி மற்றும் மகளுக்கு எமனாக மாறி தீயி’ல் கொ’ழுத்திய கொடூ’ரமான தந்தை!
கொலையில் பின்னணி அம்பலம்

மனைவி மற்றும் மகளுக்கு எமனாக மாறி தீயி’ல் கொ’ழுத்திய கொடூ’ரமான தந்தை!
சிலாபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான மேலதிக தகவல் இதுவாகும்.
சிலாபம், சிங்கபுர பகுதியில் இரண்டு மாடி வீட்டில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மரணங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (21) நடைபெற்றது.
இறந்த பெண்ணையும், அவரது மகளையும் கழு’த்தை அறு’த்து கொன்றுவிட்டு, பின்னர் உடல்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சிங்கபுர பிரதேசத்தைச் சேர்ந்த சேனாரத்ன 51 வயது, அவரது மனைவி மஞ்சுளா நிரோஷனி பண்டார (44 வயது) மற்றும் 15 வயதுடைய அவர்களது மகள் நெத்மி நிமாஷா ஆகியோரே சம்பவத்தில் உயிழந்துள்ளனர்.
உயிரிழந்த சேனாரத்ன காணிகள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். மேலும் அவரது மனைவி மஞ்சுளா சிலாபம் பிரதேச செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தராக முன்னேஸ்வரம் பிரதேசத்திற்கு பொறுப்பாக கடமையாற்றியுள்ளார்.
மகள் நெத்மி நிமேஷா சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலையில் 10ஆம் வகுப்பில் கல்வி பயின்று வந்துள்ளார்.
நேற்று (20) காலை வீடு ஒன்று தீக்கிரையாகியுள்ளதாக சிலாபம் நகரசபையின் தீயணைப்பு பிரிவுக்கு
தகவல் கிடைத்தது.
அதன்படி, தீயணைப்புப் பிரிவின் ஊழியர்கள், உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்றனர், இரண்டு மாடி வீட்டின் கீழ் தளம் ஏற்கனவே தீப்பிடித்து எரிந்திருந்தது. வீட்டின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு, கதவும் பூட்டப்பட்டிருந்ததால், வீட்டிற்குள் யாரும் இருப்பதாக வெளியில் இருந்து தெரியவில்லை.
தீயணைப்பு ஊழியர்கள் மற்றும் அயலவர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததன் பின்னர், வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்றபோது வீட்டின் அறையொன்றிலும் மண்டபத்திலும் 3 எரிந்த சடலங்கள் இருந்ததைக் கண்டனர்.
உயிரிழந்த மஞ்சுளா நிரோஷனியின் பிரேதப் பரிசோதனை முதலில் நடத்தப்பட்ட நிலையில், கழுத்தில் கூரிய ஆயுதத்தால் 6 முறை குத்திக்’கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அவர் 18ஆம் திகதி இரவு இறந்திருக்கலாம் என்று தடயவியல் வைத்திய அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார். அதிக இரத்தப்போக்கு காரணமாக மரணம் நிகழ்ந்ததாகவும், மறுநாள் உடல் எரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மகள் நெத்மி நிமேஷாவின் கழுத்தில் 2 வெட்டுக்காயங்கள் காணப்பட்டதை சட்ட வைத்திய அதிகாரி அவதானித்துள்ளதுடன், அவர் கடந்த 19ஆம் திகதி இரவு கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தார்.
உயிரிழந்த சேனாரத்ன காணிகளை சதி செய்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் பலரிடம் கடன் பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக சிலாபம்-குருநாகல் வீதியில் கொக்கவில பிரதேசத்தில் தனது மனைவி மஞ்சுளா நிரோஷனிக்கு சொந்தமான 5 ஏக்கர் காணியை சதி செய்து விற்பனை செய்ய மனைவியையும் கேட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் மனைவி இந்த திட்டத்திற்கு சம்மதிக்கவில்லை.
இந்த வீட்டில் இருந்த 25 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் சுமார் 2 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதுடன் வெளியாட்கள் எவரும் வீட்டிற்குள் நுழையவில்லை என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் வீட்டில் எந்தவித பாதுகாப்பும் இன்றி நகைகள் கிடந்தது தெரியவந்துள்ளது.
இவ்விரு சம்பவங்கள் காரணமாக கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர்கள் தங்களது அயலவர்களுடன் எந்த உறவையும் பேணவில்லை. இதனால் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்த பல விபரங்களை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மனைவி மற்றும் மகளை கொன்றுவிட்டு, கணவன் தானும் உட’லில் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.








