கலை, கலாசாரம்

குருணாகலில் லொறி விபத்து: முதியவர் பரிதாபமான உயிரிழப்பு

குருணாகலில் லொறி விபத்து: முதியவர் பரிதாபமான உயிரிழப்பு

குருணாகல், பன்னல – தன்கொட்டுவ வீதியில் சந்தலங்காவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (20) இரவு இடம்பெற்றுள்ளது.

பன்னல நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியில் விழுந்திருந்த முதியவர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

"குருணாகலில் லொறி விபத்து: முதியவர் பரிதாபமான உயிரிழப்பு"
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

விபத்தின் போது படுகாயமடைந்த முதியவர் சந்தலங்காவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 70 வயதுடைய முதியவர் ஒருவர் ஆவார்.

இதனையடுத்து லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்னல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். “குருணாகலில் லொறி விபத்து: முதியவர் பரிதாபமான உயிரிழப்பு”

Back to top button