இலங்கை செய்திகள்
அரசாங்கம் புதிய கடன் எதனையும் பெறவில்லை -விஜித ஹேரத்;
அரசாங்கம் புதிய கடன் எதனையும் பெறவில்லை -விஜித ஹேரத்;

அரசாங்கம் புதிய கடன் எதனையும் பெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று (29.10.2024) இடம்பெற்றுள்ள நிலையில், அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“புதிதாக ஆட்சியமைத்துள்ள அரசாங்கம் எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திடமும் கடன் பெறவில்லை.

மத்திய வங்கியின் கருவூல உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் காலாவதியாகும் போது விகிதாசார முறையில் புதியவற்றை வழங்கும் முறை வழமையானது.
அத்துடன், நாங்கள் புதிதாக பணம் அச்சிடவுமில்லை என்பதோடு அதை செய்யவும் முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.








