இலங்கை செய்திகள்

கல்வி அமைச்சுக்கு முன் பாரிய ஆர்ப்பாட்டம்..! பொலிஸார் குவிப்பு…

கல்வி அமைச்சுக்கு முன் பாரிய ஆர்ப்பாட்டம்..! பொலிஸார் குவிப்பு...

கல்வி அமைச்சுக்கு முன் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

4 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்து வருவதால் தம்மை ஆசிரியர்களாக நியமிக்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது, இன்று (2) இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்றது.

கல்வி, அமைச்சுக்கு, பாரிய, ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சங்க உறுப்பினர்களை கலைக்க பொலிஸார் தற்போது நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

Back to top button