பிரதான செய்திகள்
இந்தியாவுடனான உறவுகள்! ஜெய்சங்கரை சந்தித்த ரணில்

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெறும் 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டின் பக்க சந்திப்பாக நேற்று மாலை இருவருக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இருதரப்பு திட்டங்கள்
இதன்போது, இந்தியாவுடனான இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இருதரப்பு உறவுகள் மற்றும் அதனை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜெய்சங்கர் தனது உத்தியோகப்பபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.