பிரதான செய்திகள்

இலங்கைக்கு வருகிறார் சாந்தன்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலையான சாந்தன் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு நோய் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன் சொந்த நாட்டிற்கு தன்னை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சு நடத்திய நிலையில் அவர் அதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கு வருகிறார் சாந்தன்

இந்த நிலையில் சாந்தனை அழைத்து வருவதற்காக, அவருக்குரிய கடவுச்சீட்டு தேவைப்பட்ட நிலையில், இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களுக்கு அமைவாக அவருக்குரிய கடவுச்சீட்டு (Passport) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறைக்குச் சாந்தனுடைய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சக தகவல்கள் தெரிவித்தன.

இதன்படி, சாந்தன் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் வருநாட்களில் இந்திய அரசு தரப்பினால் மேற்கொள்ளப்படவுள்ளது

Back to top button