மலையக செய்திகள்
முதியவர் பரிதாப மரணம்..! பதுளையில் சம்பவம்…
முதியவர் பரிதாப மரணம்..! பதுளையில் சம்பவம்...

முதியவர் ஒருவர் பதுளை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்திற்கு அருகிலிருந்த பையில் பால்மா பைக்கற்று, சீனி , ஆடைகள் மற்றும் 600 ரூபா பணம் என்பன காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.