பிராந்திய செய்திகள்

கரையோர ரயில் சேவையில் தாமதம்: பயணிகள் அவதி

கரையோர ரயில் சேவையில் தாமதம்: பயணிகள் அவதி

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கரையோர ரயில் சேவையில் தாமதம்: பயணிகள் அவதி

இதனால், கொழும்பு கோட்டைக்கு செல்லும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இரத்மலானை – கல்கிசை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் தண்டவாளம் உடைந்த காரணத்தினாலேயே கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் சேவையில் தாமத நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், கொழும்பு கோட்டை வரையான அனைத்து அலுவலக ரயில்களும் தாமதமின்றி இயங்குவதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Back to top button