பிராந்திய செய்திகள்ஏனைய பிராந்திய செய்திகள்
இலங்கையில் இருந்து கடத்திய வெளிநாட்டு மதுபானங்கள், சிகரட்டுகளுடன் ஒருவர் கைது!
இலங்கையில் இருந்து கடத்திய வெளிநாட்டு மதுபானங்கள், சிகரட்டுகளுடன் ஒருவர் கைது!

கொமும்பு, புறக்கோட்டை பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
புறக்கோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 210 மதுபான போத்தல்கள் மற்றும் 50,000 சிகரட்டுக்கள் அடங்கிய 250 சிகரட்டு காட்டுன்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணகைளை புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.