பிரதான செய்திகள்
Trending

மதுபான அனுமதி பத்திரம் தொடர்பில் வெளிவரும் தகவல் உண்மைக்கு புறம்பானது

அதிரடி தகவல்

மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துவரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அரசாங்கத்தின் கொள்கை பிரகாரத்தின் அடிப்படையில் கடந்தாண்டு மே மாதம் முதல் 172 மதுபான அனுமதிப்பத்திரங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.

இதனூடாக, சுமார் 220 கோடி ரூபா வருமானம் ஈட்ட முடியும் எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டார்.

இதேவேளை, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையை நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0

User Rating: 4.5 ( 3 votes)

Back to top button