பிராந்திய செய்திகள்
நேபாளம் சென்ற இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய!

[ad_1]
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் அங்கு பல்வேறு பௌத்த தலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பரத்பூருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தூதரகத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள சவுத்ரி குழுமத்துடன் ராஜபக்சேவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுவதாகவும், அவரை நேபாளத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் பயணம் அரசியலை விட தனிப்பட்ட மற்றும் குடும்பம் சார்ந்தாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lankafire