பிராந்திய செய்திகள்

முல்லைத்தீவில் 15 சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரச அதிகாரிக்கு நேர்ந்த கதி!

[ad_1]

முல்லைத்தீவில் உள்ள புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி ஊழியராக கடமையாற்றும் அரச அதிகாரியை புதுக்குடியிருப்பு பொலி ஸார் நேற்றையதினம்  கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விசுவமடு கிழக்கினை சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபர் மீது சிறுமி ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமைக்கு அமைவாக இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த 15 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில்  குறிப்பிட்ட அரச அதிகாரி புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

[ad_2]
Lankafire

Back to top button