பிராந்திய செய்திகள்மலையக செய்திகள்

துண்டாக்கப்பட்ட கையை மீண்டும் பொருத்தி கண்டி மருத்துவமனை சாதனை!

கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் அமில சசங்க ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் பெண்ணொருவரின் துண்டாக்கப்பட்ட வலது கையை மீண்டும் வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.

தென்னை அறுக்கும் இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது, ​​திடீரென இயந்திரம் வேலை செய்ய ஆரம்பித்ததால், பெண்ணின் வலது கை , இயந்திரத்தில் சிக்கி, தோளில் இருந்து, நான்கு அங்குலம் தள்ளி வெட்டுப்பட்டுள்ளது.

ஆறு மணித்தியால சத்திரசிகிச்சை

சம்பவத்தில் அனுராதபுரத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கண்டி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆறு மணித்தியால சத்திரசிகிச்சையின் பின்னர் கை வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.

துண்டாக்கப்பட்ட கையை மீண்டும் பொருத்தி கண்டி மருத்துவமனை சாதனை!

டாக்டர் அமில சசங்க ரத்னாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் டாக்டர் உதய கிரிடேன, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் சமிலா ஜயரத்ன, டாக்டர் சதீர பிரேமரத்ன, எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், சிரேஷ்ட பதிவாளர் உதர ரத்நாயக்க, மயக்க மருந்து நிபுணர் டாக்டர் உடுவெல, டாக்டர் கசுன் மற்றும் சேனக ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த அறுவை சிகிச்சைக்கு ஷ்யாமா நாணயக்கார, சிதாரா சுரவீர, சந்திமா சேனவிரத்ன, திலினி அபேவர்தன, எரண்டி மதுஷானி மற்றும் சசானி கோஸ்டா உள்ளிட்ட தாதியர் குழுவும் உதவியுள்ளனர்

Back to top button