பிராந்திய செய்திகள்
சஜித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பட்டாசு வெடித்ததில் 5 பொலிஸாருக்கு நேர்ந்த நிலை!

[ad_1]
கண்டியில் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தின் தேர்தல் பிரச்சாரச் கூட்டத்தில் பட்டாசுகள் வெடித்ததில் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் பிரசாரக் கூட்டம் ஆரம்பமானதும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், பட்டாசுகள் வெடித்ததில் 5 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 2 பொதுமக்கள் காயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் பங்கேற்புடன் கண்டியில் பேரணி இடம்பெற்றுள்ளன.
Lankafire