ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
ஆள்மாறாட்ட வழக்கு: சட்டத்தரணிக்கு பிணை !

ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர் நேற்று கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.அத்துடன் சட்டத்தரணியின் அலுவலகத்தில் இருந்த மூன்று கணணிகளையும் பகுப்பாய்வு விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சட்டத்தரணி, கனிஷ்ட சட்டத்தரணிகள் மூலமாக ஆள்மாறாட்டம் செய்து, விவாகரத்து தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை விசாரணையில் தெரியவந்தது.
, ஆள்மாறாட்ட வழக்கு: சட்டத்தரணிக்கு பிணை !