ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

நண்பர்களுடன் மதுபானம் அருந்தியவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொ லை !

ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குகுல்கடுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மத்துகம பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவர் மேலும் இரண்டு நண்பர்களுடன் இணைந்து மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ள நிலையில், நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்டவரது சடலம் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில், ஹம்பேகமுவ பகுதியில் வசிக்கும் 25 மற்றும் 27 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

, நண்பர்களுடன் மதுபானம் அருந்தியவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொ லை !

Back to top button