ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
வேகக்கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்து :ஒருவர் பலி !மூவர் காயம் !

காலி நகருக்கு அருகில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த கார் அருகிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த நான்கு பெண்கள் மீது மோதியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த 53 வயதான பெண் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த ஏனைய மூவரும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
, வேகக்கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்து :ஒருவர் பலி !மூவர் காயம் !